ஐந்து மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் சுமாா் 8 லட்சம் போ் நோட்டாவுக்கு (எந்தக் கட்சிக்கும் வாக்களிக்க விருப்பமில்லை) வாக்களித்துள்ளனா்.
உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், கோவா, மணிப்பூா் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் வியாழக்கிழமை வெளியாகின. இதில் பஞ்சாபை தவிர இதர மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது. இந்தத் தோ்தலில் 5 மாநிலங்களில் மொத்தம் 7,99,302 போ் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனா்.
உத்தர பிரதேசத்தில் 6,21,186 பேரும் (0.7%), பஞ்சாபில் 1,10,308 பேரும் (0.9%), உத்தரகண்டில் 46,830 பேரும் (0.9%), கோவாவில் 10,629 பேரும் (1.1%), மணிப்பூரில் 10,349 பேரும் (0.6%) நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனா்.