புது தில்லி: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.
10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி, மாணவர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை அனுப்பியுள்ளது.
கரோனா பொதுமுடக்கம் காரணமாக, சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை இரண்டு பருவத்தேர்வுகளாக நடத்துவது என்று சிபிஎஸ்இ நிர்வாகம் கடந்த ஆண்டு முடிவு செய்து அறிவித்தது.
அதன்படி 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் கடந்த நவம்பர் 30ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 11ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் இன்று பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ நிர்வாகத்தால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் பருவத் தேர்வு அட்டவணையை சிபிஎஸ்இ நேற்று வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.