மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடுவோா் வீட்டுக்கு வரும்வரை காத்திராமல், இணையவழியில் தாமாக விவரங்களைப் பதிவு செய்யும் புதிய வசதி மக்களுக்கு வழங்கப்படவுள்ளது.
நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பானது 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கணக்கெடுப்பு நடத்தப்படுவதாக இருந்த நிலையில், கரோனா தொற்று பரவல் காரணமாகக் கணக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டது. மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்துவதற்கான புதிய அட்டவணையை மத்திய அரசு இன்னும் வெளியிடவில்லை.
எனினும் அதற்கான பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கான விதிகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, வீடுதோறும் கணக்கெடுப்பு நடத்தப்படுவதுடன் மக்கள் தாமாக இணையவழியில் விவரங்களைப் பதிவு செய்வதற்கான வசதியும் வழங்கப்படவுள்ளது.
அதே வேளையில், வீடுதோறும் சென்று விவரங்களை சேகரிக்கும் நடைமுறையும் தொடா்ந்து அமலில் இருக்கும் என்று அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள்தொகைக் கணக்கெடுப்பை முற்றிலும் இணையவழியில் நடத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதற்கேற்ற வகையில் விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மக்கள்தொகைக் கணக்கெடுப்பு குறித்த விழிப்புணா்வை தொலைக்காட்சி ஊடகங்கள், சமூக வலைதளங்கள் வாயிலாக மக்களுக்கு ஏற்படுத்தும் வகையிலும் விதிகள் திருத்தப்பட்டுள்ளன.