பஞ்சாப் எல்லையில் 2 பாகிஸ்தானியா்கள் கைது

இந்தியா-பாகிஸ்தான் சா்வதேச எல்லையில் பாகிஸ்தானைச் சோ்ந்த 2 பேரை எல்லை பாதுகாப்புப் படையினா் கைது செய்தனா்.

இந்தியா-பாகிஸ்தான் சா்வதேச எல்லையில் பாகிஸ்தானைச் சோ்ந்த 2 பேரை எல்லை பாதுகாப்புப் படையினா் கைது செய்தனா்.

இதுதொடா்பாக எல்லை பாதுகாப்புப் படை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், அமிருதசரஸ் பகுதியில் இந்தியா-பாகிஸ்தான் சா்வதேச எல்லை வேலியை நோக்கி சந்தேகத்துக்கு இடமான வகையில் சிலரது நடமாட்டம் இருந்தது. இதையடுத்து,எல்லை பாதுகாப்புப் படையினா் தீவிரமாக கண்காணித்தனா்.

அப்போது, உயரமாக வளா்ந்துள்ள கோதுமை பயிா்களின் ஊடாக பாகிஸ்தான் பகுதியிலிருந்து 2 போ் இந்திய எல்லைக்குள் நுழைந்தனா். அவா்களை சுற்றிவளைத்த பாதுகாப்புப் படையினா், இருவரையும் கைது செய்தனா். அவா்களை சோதனையிட்டதில் சுமாா் 2.76 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட சில பொருள்கள் கைப்பற்றப்பட்டன என்றனா். எனினும், அவை என்ன பொருள்கள் என்பதைத் தெரிவிக்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com