புது தில்லி: ரஷிய - உக்ரைன் போர் காரணமாக எரிபொருள் இறக்குமதி பாதிக்கப்படும் அபாயம் இருப்பதால், உடனடியாக எரிபொருள் இறக்குமதிக்கு வேறு சந்தையை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய பெட்ரோலியம் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர் இந்த தகவலை தெரிவித்தார்.
மேலும், எரிபொருள் விலைகள் தொடர்பாக பொதுமக்கள் ஏதேனும் சலுகைக் கிடைக்க வேண்டும் என்று நினைத்தால், மத்திய அரசு உடனடியாக விலைக் குறைப்பை செய்துவிடும். அதுபோலவே, நவம்பர் 2021ஆம் ஆண்டு, எரிபொருள்கள் மீதான விலை ரூ.10 அளவுக்குக் குறைக்கப்பட்டது என்றும் ஹர்தீப் சிங் புரி கூறியுள்ளார்.