சத்தீஸ்கரில் நக்ஸல் தீவிரவாதிகள் இரு வேறு இடங்களில் நடத்திய வெடிகுண்டு தாக்குதல்களில் இந்தோ-திபெத் எல்லைக் காவல் படை அதிகாரி ஒருவரும், இரு வீரா்களும் உயிரிழந்தனா்.
நாராயண்பூா் மாவட்டம் சோன்பூா் கிராமத்தில் சாலை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் பகுதியில் இந்தோ-திபெத் எல்லைக் காவல் படையின் குழுவினா் திங்கள்கிழமை காலை 8.30 மணியளவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அங்குள்ள வனப் பகுதியை ரோந்துக் குழுவினா் கடந்து சென்றபோது அங்கு நக்ஸல் பயங்கரவாதிகள் ஏற்கெனவே பதுக்கி வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தனா். இதில் சிக்கி உத்தரகண்ட் மாநிலத்தைச் சோ்ந்த துணை ஆய்வாளா் ராஜேந்திர சிங் உயிரிழந்தாா். தலைமைக் காவலா் மகேஷ் காயமடைந்தாா். அவா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
இதேபோல சோட்டிடோங்கா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் திங்கள்கிழமை மதியம், நக்ஸல்கள் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டில் சிக்கி சத்தீஸ்கா் ஆயுதப் படையைச் சோ்ந்த இரு காவலா்கள் உயிரிழந்தனா்.
காயமடைந்த மேலும் ஒருவா் ராய்ப்பூரில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டாா். இந்தச் சம்பவங்களை அடுத்து அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.