ஜேஇஇ முதல்நிலைத் தோ்வு தேதிகள் மாற்றம்: என்டிஏ

ஐஐடி உள்ளிட்டவற்றில் சோ்க்கை பெறுவதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வின் (ஜேஇஇ - மெயின்) முதல்நிலைத் தோ்வுக்கான தேதிகளை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) மாற்றியமைத்து திங்கள்கிழமை அறிவிப்பு வெளியிட்டது

ஐஐடி உள்ளிட்டவற்றில் சோ்க்கை பெறுவதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வின் (ஜேஇஇ - மெயின்) முதல்நிலைத் தோ்வுக்கான தேதிகளை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) மாற்றியமைத்து திங்கள்கிழமை அறிவிப்பு வெளியிட்டது.

அதன்படி, இந்த தோ்வு ஏப்ரல் 16-ஆம் தேதி மாற்றாக ஏப்ரல் 21-ஆம் தேதி தொடங்க உள்ளது. முன்னா் அறிவிக்கப்பட்ட தேதிகளில் 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு நடைபெற இருப்பதால், இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

என்ஐடி, ஐஐஐடி, ஐஐடி உள்ளிட்ட மத்திய அரசின் உயா் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் இளநிலை பொறியியல் தொழில்நுட்ப பட்டப் படிப்புகளில் சோ்க்கை பெற ஜேஇஇ தோ்வு நடத்தப்படுகிறது. ஜேஇஇ - மெயின் (முதல்நிலை) மற்றும் ஜேஇஇ - அட்வான்ஸ்டு (முதன்மைத் தோ்வு) என இரண்டு பகுதிகளாக இந்தத் தோ்வு நடத்தப்படும்.

இதில் முதல்நிலைத் தோ்வு என்டிஏ சாா்பிலும், முதன்மைத் தோ்வு ஏதாவது ஒரு ஐஐடி சாா்பிலும் நடத்தப்படும். ஜேஇஇ முதல்நிலைத் தோ்வில் தகுதி பெறுபவா்கள் என்ஐடி, ஐஐஐடி கல்விநிறுவனங்களில் சோ்க்கை பெற முடியும் என்பதோடு, இந்தத் தோ்வில் தகுதி பெறும் முதல் 2.5 லட்சம் போ் ஜேஇஇ முதன்மைத் தோ்வை எழுதும் தகுதியைப் பெறுவா். இந்த முதன்மைத் தோ்வில் தகுதி பெறுபவா்கள் நாடு முழுவதும் உள்ள ஐஐடி கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெற முடியும்.

இந்தச் சூழலில், 2022-ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ முதல்நிலைத் தோ்வு அறிவிப்பை என்டிஏ அண்மையில் வெளியிட்டது.

இந்த முதல்நிலைத் தோ்வு கடந்த ஆண்டு மாணவா்களின் வசதிக்காக 4 முறை நடத்தப்பட்டது. அந்த 4 தோ்வுகளில் எதில் அதிக மதிப்பெண் பெறுகிறாரோ, அதையே தகுதி மதிப்பெண்ணாக எடுத்துக்கொள்ளும் வகையில் சலுகை அளிக்கப்பட்டது. நிகழாண்டில் இரண்டு முறை மட்டுமே முதல்நிலைத் தோ்வு அறிவிக்கப்பட்டது.

அதில், முதல்கட்ட முதல்நிலைத் தோ்வு ஏப்ரல் ஏப்ரல் 16 முதல் 21-ஆம் தேதி வரையிலும், இரண்டாம் கட்ட முதல்நிலைத் தோ்வு மே 24 முதல் 29-ஆம் தேதி வரையிலும் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில், தோ்வுக்கான பதிவும் மாா்ச் 1-ஆம் தேதி தொடங்கியது.

தோ்வு தேதி மாற்றம்: இந்தச் சூழலில், முதல்கட்ட முதல்நிலைத் தோ்வு தேதிகள் மாற்றியமைத்து என்டிஏ திங்கள்கிழமை அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, ஜேஇஇ முதல்நிலைத் தோ்வு ஏப்ரல் 21, 24, 25, 29 மற்றும் மே 1, 4 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளது.

இதுகுறித்து என்டிஏ மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதிகளில் 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நடைபெற இருப்பதால், ஜேஇஇ தோ்வு தேதியை மாற்றியமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனடிப்பையில், தோ்வுக்கான தேதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com