ஸ்ரீநகரில் துப்பாக்கிச்சூடு: 3 லஷ்கர் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 3 லஷ்கர் -இ-தொய்பா தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 
ஸ்ரீநகரில் துப்பாக்கிச்சூடு: 3 லஷ்கர் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 3 லஷ்கர் -இ-தொய்பா தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

நவ்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாகத் தகவல் கிடைத்ததும், பாதுகாப்புப் படையினர் அதிகாலை அப்பகுதியைச் சுற்றி வளைத்து, தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

பதிலடி கொடுத்த பாதுகாப்புப் படைகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த நடவடிக்கையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

கொல்லப்பட்டவர்கள் சோபியான் மாவட்டத்தைச் சேர்ந்த அடில் டெலி மற்றும் சாகிப் தந்த்ரே என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மூன்றாவது நபர் உமர் டெலியை அடையாளம் காண அவரது குடும்பத்தினரை அழைக்கப்பட்டுள்ளது. 

இந்த  மூவரும் உள்ளூர் பயங்கரவாதிகள் என்றும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் ஜம்மு - காஷ்மீர் காவல்துறை ஐ.ஜி. விஜய் குமார் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச்சூடு நடைபெற்ற இடத்திலிருந்து ஒரு ஏகே 47 மற்றும் இரண்டு கைத்துப்பாக்கிகள் மீட்கப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com