இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,876 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேர கரோனா பாதிப்பு நிலவரம் குறித்த தரவுகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டுள்ளது. புதிதாக 2,876 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 98 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். 3,884 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 5,16,072ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 4,24,50,055 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
இதையும் படிக்க | ரசாயன ஆயுதங்களை ரஷியா பயன்படுத்தக்கூடும்: நேட்டோ
இன்றைய நிலவரப்படி 32,811 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.