உத்தரப் பிரதேசத்தில் நன்பரா தொகுதியில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.வின் கார் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கற்கள் வீசி தாக்குதல் நடத்தியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பாஜகவின் கூட்டணிக் கட்சியான அப்னா தளத்தின்(சோனேலால்) சட்டமன்ற உறுப்பினர் ராம் நிவாஸ் வர்மா நேற்றிரவு 8.30 மணியளவில் நன்பராவில் இருந்து பஹ்ரைச்சில் உள்ள மாடேரா சந்திப்பை அடைந்தபோது மர்மநபர்கள் கற்கள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாகக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கூறினார்.
இந்த தாக்குதலில் உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை எனினும், வாகனத்தின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இதுதொடர்பாக குற்றவாளி விரைந்து கைது செய்யப்படுவார்கள் என்று அவர் கூறினார்.