ஹோலி பண்டிகை: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ஹோலி பண்டிகையையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஹோலி பண்டிகையையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் உள்ள மக்களால் இன்று ஹோலி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள், ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளைத் தூவி அல்லது வண்ணம் கலந்த நீரை ஊற்றி கொண்டாடுகின்றனர். 

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், பிகார், மேற்குவங்கம், குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில் இது வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 

ஹோலி பண்டிகையையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,  'உங்கள் அனைவருக்கும் ஹோலி வாழ்த்துக்கள். பரஸ்பர அன்பு, பாசம் மற்றும் சகோதரத்துவத்தின் அடையாளமான இந்த வண்ணங்களின் திருவிழா உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியின் ஒவ்வொரு நிறத்தையும் கொண்டு வரட்டும்' என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com