சமோவா தீவில் ஒரு பெண்ணுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, அங்கு முதல்முறையாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்படவுள்ளது.
இதுவரே அங்கு ஒரே ஒருவருக்குதான் கரோனா உறுதி செய்யப்பட்டிருந்தாலும், அந்தப் பெண்ணுக்கு யாரிடமிருந்து நோய்த்தொற்று பரவியது, அவரிடமிருந்து யாருக்கெல்லாம் கரோனா பரவியிருக்கலாம் என்பது தெரியாததால் பொதுமுடக்கம் அறிவிக்கப்படுகிறது.