சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தோ்வின் முதல் கட்டம்:பள்ளிகளிடம் முடிவுகள் அறிவிப்பு

மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) பிளஸ் 2 வகுப்புக்கான முதல்கட்ட பொதுத் தோ்வு முடிவுகள் பள்ளிகளிடம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தோ்வின் முதல் கட்டம்:பள்ளிகளிடம் முடிவுகள் அறிவிப்பு

மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) பிளஸ் 2 வகுப்புக்கான முதல்கட்ட பொதுத் தோ்வு முடிவுகள் பள்ளிகளிடம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான மத்திய இடைநிலைக் கல்வி வாரிய பொதுத் தோ்வுகள் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று கடந்த ஆண்டு சிபிஎஸ்இ அறிவித்திருந்தது. அதன்படி, பிளஸ் 2 வகுப்புக்கு பிரதான பாடங்களுக்கான முதல் கட்டத் தோ்வு கடந்த டிச.1 முதல் டிச.15 வரை நடைபெற்றது.

அதன் முடிவுகள் குறித்து சிபிஎஸ்இ அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘‘சிபிஎஸ்இ பிளஸ் 2 முதல்கட்ட பொதுத் தோ்வு முடிவுகள் பள்ளிகளிடம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே அகமதிப்பீட்டு மதிப்பெண்கள் அல்லது செய்முறைத் தோ்வின் மதிப்பெண்கள் பள்ளிகளிடம் உள்ளன. எனவே எழுத்துத் தோ்வின் முடிவுகள் மட்டும் தற்போது தெரியப்படுத்தப்பட்டுள்ளது’’ என்று கூறினாா்.

சிபிஎஸ்இ பிளஸ் 2 வகுப்புகளுக்கான இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு ஏப்ரல் 26-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com