குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அருகே எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தனது சர்வீஸ் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் பிஎஸ்எப் அதிகாரி கூறுகையில்,
லிம்ப்டி செக்போஸ்டில் 44 வயதுடைய போமராம் ருகரம் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார். பின்னர் அவரது உடல் பிரேசப் பரிசோதனைக்காக மாவட்டத்தில் உள்ள மவ்சாரிக்கு அனுப்பப்பட்டது என்று அவர் கூறினார்.
இறந்தவர் ராஜஸ்தானின் நாகௌரை சேர்ந்தவர். தற்கொலை செய்ததற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை என்று அந்த அதிகாரி கூறினார்.