ஸ்ரீநகரில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் காவலர் ஒருவர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோதிபாக் துணைப் பிரிவு காவல் அதிகாரியுடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட இம்ரான் அகமது, சௌராவின் போலோச்சிபோரா பகுதியில் தீவிரவாதிகளால் சுடப்பட்டார்
பின்னர், அங்குள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாதுகாப்புப் படையினரால் அப்பகுதி சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகின்றது.