கே-ரயில் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடியை கேரள முதல்வர் பினராயி விஜயன் வியாழக்கிழமை நேரில் சந்தித்து பேசவுள்ளார்.
கேரள அரசு கே-ரயில் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால், அதிவேக ரயில் மூலம் திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரையிலான 529.45 கிலோ மீட்டர் தூரத்தை 4 மணிநேரத்தில் பயணிக்கலாம்.
இந்த திட்டத்தை எதிர்த்து மாநிலம் முழுவதும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மக்களவையிலும் காங்கிரஸ் கடும் எதிர்ப்பை தெரிவித்தது.
இந்நிலையில், நாளை தில்லி செல்லும் கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து திட்டம் குறித்து விளக்கம் அளிக்கவுள்ளார்.
இந்த திட்டத்திற்கு ரூ. 63,940 கோடி செலவாகும் என கேரள அரசு தெரிவித்த நிலையில், 2025-இல் திட்டம் முடிவடையும்போது ரூ. 1.24 லட்சம் கோடி செலவாகும் என நிதி அயோக் தெரிவித்துள்ளது.