மார்ச் 25ல் ஹரியாணா காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை

ஹரியாணா காங்கிரஸ் தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வருகிற மார்ச் 25 ஆம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார். 
மார்ச் 25ல் ஹரியாணா காங்கிரஸ் தலைவர்களுடன்  ராகுல் காந்தி ஆலோசனை

ஹரியாணா காங்கிரஸ் தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வருகிற மார்ச் 25 ஆம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார். 

இந்த கூட்டத்தில் மாநில முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, மாநில பொறுப்பாளர் விவேக் பன்சால், ரந்தீப் சுர்ஜேவாலா, மாநிலத் தலைவர் குமாரி செல்ஜா, தீபேந்தர் ஹூடா, கேப்டன் அஜய் யாதவ் உள்ளிட்ட பலர் கலந்துகொள்கின்றனர்.

நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் பெரும் தோல்வியை சந்தித்தது. தேர்தல் தோல்விக்குப் பின்னர் ராகுல் காந்தி பங்கேற்கும் முதல் கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஹரியாணா மாநிலத்தில் 2024 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதுகுறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என்றும் தெரிகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com