பிரதமர் நரேந்திர மோடியை பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வியாழக்கிழமை நேரில் சந்தித்தார்.
பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி ஆம் ஆத்மி ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து, கடந்த வாரம் முதல்வராக பகவந்த் மான் பொறுப்பேற்றார்.
இதையும் படிக்க | ‘தமிழகம் ஏழை மாநிலம் அல்ல; வளர்ந்த மாநிலம்’: நிதியமைச்சர் பதிலுரை
இந்நிலையில், முதல்வாரன பிறகு முதல்முறையாக தில்லி சென்ற பகவந்த் மான் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்துத்தார்.
இதனைத் தொடர்ந்து, ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவாலை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.