ஷிம்லா: பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்து அரசியல் கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளி, வெற்றிவாகைச் சூடியிருக்கும் ஆம் ஆத்மி கட்சி, சூட்டோடு சூடாக மலைப் பிரதேசமான இமாசலில் நங்கூரமிட திட்டமிட்டுள்ளது.
வரும் நவம்பர் மாதம் இமாசலில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், 1985 ஆம் ஆண்டு முதல் பாஜகவும் காங்கிரசும் மாறி மாறி ஆட்சி செய்து வந்திருப்பதே வரலாறாக உள்ளது.
இதையும் படிக்க.. பெண் செய்தியாளர் எழுதிய 3 உருக்கமான தற்கொலை கடிதங்கள்
அங்கு காங்கிரஸ் - பாஜக இடையே தான் கடும் மோதல் நிலவுகிறது. இதர கட்சிகள் காலத்துக்கு ஏற்ப கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும்.
இந்த மாநிலம் ஆம் ஆத்மிக்கு ஒன்றும் புதியது அல்ல. ஏற்கனவே 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இந்த மாநிலத்தில் ஆம் ஆத்மி போட்டியிட்டது. பஞ்சாப் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இமாசலில் உத்வேகத்துன் கட்சிப் பணிகள் நடந்து வருகின்றன. ஆனால், இரு பெரும் கட்சிகள் மீது அதிருப்தியில் இருப்பவர்கள் மட்டுமே ஆம் ஆத்மிக்கு ஆதரவளிப்பார்கள் என்பதால் வெற்றிக் கனி அவ்வளவு எளிதில் கிட்டும் வாய்ப்பு குறைவு என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.