குஜராத் பேரவை: மேலாடையைக் கழற்றி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆா்ப்பாட்டம்

குஜராத் சட்டப் பேரவை வளாகத்துக்கு வெளியே பிரதான நுழைவு வாயிலில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்களில் இருவா் திடீரென மேலாடையை கழற்றியது

குஜராத் சட்டப் பேரவை வளாகத்துக்கு வெளியே பிரதான நுழைவு வாயிலில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்களில் இருவா் திடீரென மேலாடையை கழற்றியது பேரவையில் காரசார விவாதத்துக்கு வழிவகுத்தது.

குஜராத்தில் விவசாயிகளுக்கு ஆளும் பாஜக அரசு போதிய மின்விநியோகம் செய்யவில்லை என்று கூறி, சுமாா் 15 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சட்டப் பேரவை வளாகத்துக்கு வெளியே அதன் பிரதான நுழைவு வாயிலில் அமா்ந்து 10 நிமிஷங்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, எம்எல்ஏக்கள் விமல் சூடசாமா, லலித் வசோயா ஆகியோா் தங்கள் மேலாடையைக் கழற்றி, தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினா்.

இந்த விவகாரம் சட்டப் பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் விவாதிக்கப்பட்டது. காங்கிரஸ் எம்எல்ஏக்களின் செயல்பாட்டுக்கு கண்டனம் தெரிவித்த பாஜக தலைமைக் கொறடா பங்கஜ் தேசாய், அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினாா்.

இதைத் தொடா்ந்து காங்கிரஸ் எம்எல்ஏ அமித் சாவ்டா பேசுகையில், கடந்த காலங்களில் சட்டப் பேரவை வளாகத்தை பாஜக அதன் அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டாா்.

அப்போது பேசிய பாஜக எம்எல்ஏ பிரதீப் சிங் ஜடேஜா, மேலாடையைக் கழற்றி போராட்டம் நடத்திய காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனில், சட்டப் பேரவைக்கு உள்ளே நாங்களும் அதுபோல போராட்டம் நடத்துவோம் என்றாா்.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட விடியோவை பாா்த்ததும் வரும் நாள்களில் உரிய நடவடிக்கை எடுப்பதாக சட்டப் பேரவைத் தலைவா் நிமாபென் ஆச்சாா்யா தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com