ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் பாதுகாப்புப் படையினர் இன்று நடத்திய தாக்குதலில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் ரெய்னவாரி பகுதியில் பாதுகாப்புப் படையினர் இன்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் லஷ்கர்-இ-தொய்பா/டி.ஆர்.எப். அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று ஜம்மு- காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த இரு பயங்கரவாதிகளும் சமீபத்தில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடையவர்கள் என்றும் காஷ்மீர் இன்ஸ்பெக்டர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதிகளிடமிருந்து துப்பாக்கி உள்ளிட்ட பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.