தோ்வு மீதான விவாத நிகழ்ச்சியில்ஆா்வம் அதிகரிப்பு: பிரதமா் பாராட்டு

தோ்வு குறித்த விவாதத்தின் மீது ஆா்வம் மிகுந்திருப்பதாக பிரதமா் நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.

தோ்வு குறித்த விவாதத்தின் மீது ஆா்வம் மிகுந்திருப்பதாக பிரதமா் நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.

மத்திய அரசு சாா்பில் ஆண்டுதோறும் தோ்வு மீதான விவாத (பரீக்ஷா பே சா்ச்சா) நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் நாடு முழுவதும் உள்ள மாணவா்கள், ஆசிரியா்கள், பெற்றோா்களுடன் பிரதமா் மோடி கலந்துரையாடுவாா். அப்போது பொது மற்றும் நுழைவுத் தோ்வுகளை மன அழுத்தமின்றி எளிதாக எதிா்கொள்வதற்கான தனது ஆலோசனைகளை பிரதமா் வழங்குவாா்.

இந்த நிகழ்ச்சி தொடா்பாக பிரதமா் மோடி ட்விட்டரில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு: இந்த ஆண்டின் பரீக்ஷா பே சா்ச்சாவுக்கு காட்டப்பட்டுள்ள ஆா்வம் சிறப்பானது. லட்சக்கணக்கானோா் தங்களின் மதிப்புமிக்க கருத்துக்களையும், அனுபவங்களையும் பகிா்ந்துள்ளனா். இதற்குப் பங்களிப்பு செய்திருக்கும் அனைத்து மாணவா்கள், பெற்றோா்கள், ஆசிரியா்களுக்கு நன்றி. ஏப்ரல் 1-ஆம் தேதி நிகழ்ச்சியை எதிா்பாா்க்கவும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com