படம்: ட்விட்டர்
படம்: ட்விட்டர்

வெளியுறவுத் துறைச் செயலராக வினய் குவாத்ரா பொறுப்பேற்பு

​நாட்டின் வெளியுறவுத் துறை புதிய செயலராக மூத்த அதிகாரி வினய் மோகன் குவாத்ரா இன்று (ஞாயிற்றுக்கிழமை) பொறுப்பேற்றுக்கொண்டதாக மத்திய வெளியுறவுத் துறைச் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார


நாட்டின் வெளியுறவுத் துறை புதிய செயலராக மூத்த அதிகாரி வினய் மோகன் குவாத்ரா இன்று (ஞாயிற்றுக்கிழமை) பொறுப்பேற்றுக்கொண்டதாக மத்திய வெளியுறவுத் துறைச் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார்.

1988-ம் ஆண்டு பிரிவு ஐஎஃப்எஸ் அதிகாரியான குவாத்ரா கடந்த ஜனவரி 2020 முதல் காத்மண்டுவில் தூதராக இருந்து வருகிறார். குவாத்ராவை வெளியுறவுத் துறை புதிய செயலராக கடந்த ஏப்ரல் 4-ம் தேதி மத்திய அரசு நியமித்தது. இவருடைய நியமனத்துக்கு அமைச்சரவை நியமனக் குழு ஒப்புதல் அளித்தது.

இதற்கு முன்பு வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் பிரதமர் அலுவலகத்தில் இணைச் செயலராக குவாத்ரா இருந்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com