உத்தரப் பிரதேசத்தில் காயம்கஞ்ச் சாலையில் காரும், டெம்போவும் மோதிக்கொண்டு விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். 8 பேர் காயமடைந்தனர்.
விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் டெம்போவில் இருந்தவர்கள். என்றும், காயமடைந்தவர்கள் காரில் அமர்ந்திருந்தனர் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
முதல்கட்ட தகவலின்படி, டெம்போவில் இருந்தவர்கள் பாட்டியாலியில் நடக்கும் சத்சங்கம் ஒன்றில் கலந்துகொள்ளச் சென்று கொண்டிருந்தனர்.
இந்த சம்பவம் குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளதோடு, காயமடைந்தவர்களுக்கு உரியச் சிகிச்சை அளிக்குமாறு தொடர்புடைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.