நாட்டின் நிலைமை சரியில்லை; பயப்படாமல் போராட வேண்டும்: மம்தா பானர்ஜி

நாட்டின் நிலைமை சரியில்லாததால் பயப்படாமல் போராட வேண்டும் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மம்தா பானர்ஜி (கோப்புப்படம்)
மம்தா பானர்ஜி (கோப்புப்படம்)

நாட்டின் நிலைமை சரியில்லாததால் பயப்படாமல் போராட வேண்டும் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் முதல்வர் மம்தா பானர்ஜி இன்று ரமலான் விழாவில் பங்கேற்ற கொல்கத்தாவின் செஞ்சாலையில் ஈத்-உல்-பிதர் பிராத்தனையில் பங்கேற்றார்.

பின், அங்கு கூடியிருந்த மக்களிடம் ‘நாட்டில் நிலை தற்போது சரியாக இல்லை. தனிமைப்படுத்தும் அரசியலை வரவேற்க முடியாது. நீங்கள் அனைவரும் பயப்படாமல் எதிர்த்துப் போராட வேண்டும். நாம் இணைந்தால் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க முடியும்’ எனக் கூறினார்.

மேலும், 14,000 பேர் பங்கேற்ற அக்கூட்டத்தில் ‘நானோ எனது கட்சியோ இந்த அரசாங்கமோ உங்களை வருத்தப்படுத்தும் எந்தச் செயலையும் செய்ய மாட்டோம்’ எனத் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com