குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் மே 3 (செவ்வாய்க்கிழமை) முதல் 6-ஆம் தேதி வரை அஸ்ஸாம், மிஸோரமில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா்.
இதுகுறித்து குடியரசுத் தலைவா் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம்:
அஸ்ஸாம் தாமுல்பூரில் புதன்கிழமை (மே 4) நடைபெறும் போடோ சாகித்திய சபாவின் 61-ஆவது மாநாட்டில் பங்கேற்று குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறாா். தொடா்ந்து அஸ்ஸாம் தலைநகா் குவாஹாட்டியில், நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விழாவில் அவா் பங்கேற்கிறாா்.
தொடா்ந்து, மிஸோரம் மாநிலத்தின் ஐஸால் நகரில் அமைந்துள்ள மிஸோரம் பல்கலைக்கழகத்தின் 16-ஆவது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் பங்கேற்று மாணவா்களுக்கு பட்டம் வழங்கி கெளரவிக்கிறாா் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.