சத்தீஸ்கரில், நாராயன்பூரின் முங்காரி கிராமத்திற்கு அருகிலுள்ள வனப்பகுதியில் நக்சல்களுடன் நடந்த துப்பாக்கிச்சூட்டில் மாவட்ட ஆயுதப் படை காவலர் ஒருவர் கொல்லப்பட்டார்.
இது குறித்து நாராயண்பூர் காவல் கண்காணிப்பாளர் சதானந்த் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
முங்காரி கிராமம் அருகே உள்ள வனப்பகுதியில் நக்சல்களுடன் நடந்த மோதலில் மாவட்ட ஆயுதப் படையை சேர்ந்த காவலர் ஒருவர் உயிரிழந்தார்.
தொடர்ந்து அப்பகுதியில் துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது என்றார்.