இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லா மாவட்டத்தில் கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்ததாக மாநில பேரிடர் மேலாண்மையின் மூத்த அதிகாரி தெரிவித்தனர்.
விபத்தில் உயிரிழந்த நால்வரும் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது 11.30 மணியளவில் இந்த விபத்து நடைபெற்றதாக மாநில பேரிடர் மேலாண்மை இயக்குநர் சுதேஷ் மோக்தா தெரிவித்தார்.
உயிரிழந்தவர்கள் சிம்லா மாவட்டத்தில் உள்ள போலாட் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இறந்தவர்கள் சிம்லா மாவட்டத்தில் உள்ள போலாட் கிராமத்தைச் சேர்ந்தவர். உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக ரோரு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.