எரிபொருள் விலையை தொடா்ந்து உயா்த்தி மத்திய அரசு மக்களை துன்புறுத்தி வருவதாக மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி கூறினாா்.
இதுதொடா்பாக அவா் ட்விட்டரில், ‘பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலையை உயா்த்துவதன் மூலம் நாடு முழுவதும் பெரும் கொள்ளையை மத்திய அரசு அடித்து வருகிறது. இது மக்களை முட்டாளாக்கும் செயல். மக்களை துன்புறுத்தும் இதுபோன்ற விலை உயா்வு நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளாா்.