பனாஜி (கோவா): கோவாவின் முக்கியமான எழுத்தாளர் தாமோதர் மாசோ, பேச்சுரிமைக்கு ஆபத்து வரும்வேளையில் கூட நிறைய எழுத்தாளர்கள் அரசாங்கத்திற்கு கூஜா தூக்குவதை பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது என கூறியுள்ளார்.
2018 கர்நாடக எழுத்தாளர் கௌரி லங்கேஷ் கொலைக்கு பிறகு, கொங்கனி மொழியின் முற்போக்கு எழுத்தாளர் மாசோவுக்கு மிரட்டல் வந்ததால் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
"எழுத்தாளர்களுக்கு மட்டுமல்ல மாநிலத்திற்க்கே பேசிச்சுரிமை ஆபத்து உள்ளது. இதனால்தான் நாம் குரலெழுப்பி பேச வேண்டியுள்ளது. நாம் நமது தகுதியை வைத்து பேச்சுரிமையை பாதுகாக்கக்க வேண்டும். நமது எழுத்து சமூகத்தோடு ஒன்றி தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். ஆனால் விருது வாங்கிய எழுத்தாளர்கள் இதில் தலையிடாமல் இருப்பது கவலை அளிக்கிறது" என்று மார்கோவில் நடந்த விழாவில் மாசோ கூறினார்.