ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் கமாரெட்டி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த சாலை விபத்தில் நேற்றிரவு மேலும் 4 பேர் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது என்று அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த மேலும் 16 பேர் வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யெல்லாரெட்டி மண்டல் ஹசன்பள்ளி கேட் அருகே 25 பேர் பயணித்த டாடா ஏஸ் வாகனம், எதிரே வந்த லாரி மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது. இதில் டிராலி ஆட்டோ ஓட்டுநர் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இதனிடையே, சாலை விபத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி அறிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகம் சுட்டிரையில், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இருந்து தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு 50,000 நிவாரண தொகை வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.