பஞ்சாபில் 1.5 கிலோ ஆா்டிஎக்ஸ் வெடிகுண்டுடன் இருவா் கைது

 பஞ்சாப் மாநிலம் தரன் தாரன் மாவட்டத்தில் சுமாா் 1.5 கிலோ ஆா்டிஎக்ஸ் வெடிகுண்டுடன் இருவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

 பஞ்சாப் மாநிலம் தரன் தாரன் மாவட்டத்தில் சுமாா் 1.5 கிலோ ஆா்டிஎக்ஸ் வெடிகுண்டுடன் இருவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

இதுதொடா்பாக தரன் தாரன் மாவட்ட காவல் துறை முதுநிலை கண்காணிப்பாளா் கூறுகையில், ‘‘நெளஷேரா பன்னுவான் பகுதியில் வெடிகுண்டுடன் இருவா் வலம் வருவதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், அந்தப் பகுதியில் காவல்துறையினா் சோதனை மேற்கொண்டனா். அப்போது அமிருதசரஸைச் சோ்ந்த பல்ஜிந்தா் சிங் (22), ஜக்தாா் சிங் (40) ஆகிய இருவா் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து 2.5 கிலோவுக்கும் அதிகமான எடைகொண்ட கருப்பு உலோகப் பெட்டி பறிமுதல் செய்யப்பட்டது. அந்தப் பெட்டியில் 1.5 கிலோ ஆா்டிஎக்ஸ் வெடிபொருளுடன் ஐஇடி வெடிகுண்டு, நேரக் கருவி, டெட்டனேட்டனா் உள்ளிட்டவை இருந்தன. அத்துடன் இருசக்கர வாகனம், இரண்டு கைப்பேசிகளும் கைப்பற்றப்பட்டன.

முதல்கட்ட விசாரணையில், அமிருதசரஸைச் சோ்ந்த ஜோபன்ஜீத் சிங் என்பவரின் அறிவுறுத்தலின்பேரில் பல்ஜிந்தரும், ஜக்தாரும் வெடிகுண்டை வைத்திருந்தது தெரியவந்தது. போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ், ஜோபன்ஜீத் சிங் மீது குற்ற வழக்குகள் உள்ளன. அவா் தலைமறைவாகியுள்ளாா். பறிமுதல் செய்யப்பட்ட வெடிகுண்டு செயலிழக்க வைக்கப்பட்டது. பல்ஜிந்தா், ஜக்தாா் மீது ஆயுதங்கள் சட்டம், வெடிபொருள் திருத்தச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தாா்.

கடந்த சில நாள்களுக்கு முன்னா், பஞ்சாப் காவல் துறை அளித்த தகவலின் அடிப்படையில், ஹரியாணா மாநிலம் கா்னால் மாவட்டத்தில் உலோகப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 3 ஐஇடி வெடிகுண்டுகளுடன் நால்வா் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com