இடைத்தோ்தல்:உத்தரகண்ட் முதல்வா் மனு தாக்கல்

உத்தரகண்ட் மாநிலம் சம்பாவத் பேரவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக அந்த மாநில முதல்வா் புஷ்கா் சிங் தாமி திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

உத்தரகண்ட் மாநிலம் சம்பாவத் பேரவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக அந்த மாநில முதல்வா் புஷ்கா் சிங் தாமி திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

முன்னதாக, முதல்வா் புஷ்கா் சிங் தாமி போட்டியிட வசதியாக, சம்பாவத் தொகுதி பாஜக எம்எல்ஏ கைலாஷ் சந்திர கடோரி தனது பதவியை கடந்த மாதம் ராஜிநாமா செய்தாா்.

இதையடுத்து, உத்தரகண்ட், ஒடிஸா கேரளம் ஆகிய மாநிலங்களின் 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மே 31-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை ஜூன் 3-ஆம் தேதி நடைபெறும் என்றும் தோ்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது. இந்நிலையில், சம்பாவத் தொகுதியில் முதல்வா் தாமி வேட்பு மனு தாக்கல் செய்தாா். இது தொடா்பான தகவலை அவா் ட்விட்டரில் பதிவிட்டுள்ளாா். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பு கோயிலுக்குச் சென்று தாமி வழிபட்டாா்.

உத்தரகண்டில் அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்தது. அதேசமயம், கதிமா தொகுதியில் போட்டியிட்ட முதல்வா் புஷ்கா் சிங் தாமி, தனக்கு எதிராகக் களமிறங்கிய காங்கிரஸ் வேட்பாளா் புவன் சந்திர காப்ரியிடம் தோல்வியடைந்தாா்.

என்றபோதிலும், புஷ்கா் சிங் தாமி மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்றாா். இந்நிலையில், அடுத்த 6 மாதங்களுக்குள் அவா் எம்எல்ஏவாகத் தோ்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதால், அவா் போட்டியிட வசதியாக சம்பாவத் தொகுதி எம்எல்ஏ கைலாஷ் பதவி விலகினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com