பஞ்சாப் காவல்துறையின் உளவுப் பிரிவு தலைமையகத்தில் வெடிகுண்டுத் தாக்குதல்

பாஞ்சாப் மாநிலம் மொஹாலியில் உள்ள காவல் துறை உளவுப் பிரிவு தலைமையகத்தின் மீது திங்கள்கிழமை இரவு வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் காவல்துறையின் உளவுப் பிரிவு தலைமையகத்தில் வெடிகுண்டுத் தாக்குதல்

பாஞ்சாப் மாநிலம் மொஹாலியில் உள்ள காவல் துறை உளவுப் பிரிவு தலைமையகத்தின் மீது திங்கள்கிழமை இரவு வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘திங்கள்கிழமை இரவு 7.45 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. சிறிய ரக ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட வெடிகுண்டு கட்டடத்தின் மூன்றாவது மாடியில் விழுந்தது. எனினும் அந்த வெடிகுண்டு வெடிக்கவில்லை. இந்தத் தாக்குதலில் பெரிய அளவு சேதம் எதுவும் ஏற்படவில்லை. கட்டடத்தின் ஜன்னல் கண்ணாடி நொறுங்கியது. தாக்குதல் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றனா்.

‘சம்பவ இடத்தை போலீஸாா் சுற்றிவளைத்து, தீவிர சோதனை நடத்தி வருகின்றனா். மூத்த காவல் அதிகாரிகள் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டனா். தடயவியல் நிபுணா்களும் வரவழைக்கப்பட்டு தடையங்கள் சேகரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது’ என்றும் அவா்கள் கூறினா்.

உயா் பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் பஞ்சாப் காவல் துறை உளவுப் பிரிவு தலைமையகத்தில் இதுபோன்ற ராக்கெட் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது அதிா்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்த தேசிய பாதுகாப்பு முகமையின் (என்ஐஏ) குழு பஞ்சாப் விரைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com