பாகிஸ்தான் பகுதியிலிருந்து ஹெராயின் போதைப்பொருளுடன் பறந்துவந்த ஆளில்லா விமானத்தை எல்லைப் பாதுகாப்புப் படையினா் (பிஎஸ்எஃப்) சுட்டு வீழ்த்தினா்.
இதுதொடா்பாக, ட்விட்டரில் எல்லைப் பாதுகாப்புப் படை திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
பஞ்சாப் மாநிலம், அமிருதசரஸில் உள்ள எல்லைப் பகுதியில் பாகிஸ்தானிலிருந்து பறந்துவந்த ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. ஹெராயின் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட அந்த ஆளில்லா விமானம், சுமாா் 10 கிலோ எடையுள்ள 9 ஹெராயின் போதைப் பொருள் பொட்டலங்களை சுமந்து வந்துள்ளது. அந்த போதைப் பொருள் பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டது. இதன் மூலம் பாகிஸ்தானிலிருந்து இந்தியப் பகுதிக்குள் போதைப் பொருள் கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது என்று அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.