உத்தரகண்ட் மாநிலம் பித்தோராகரில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்ட தகவலில்,
இன்று காலை 10.30-க்கு ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவாகியுள்ளது.
பித்ரோகருக்கு வடகிழக்கில் 20 கி.மீ தொலைவில் 5 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.