பிரதமர் நரேந்திர மோடி தலைமை மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
கட்சிப் பணிகளிலும், அரசுப் பணிகளிலும் சிறப்பாக செயல்படும் ஒரே தலைவர் நரேந்திர மோடிதான் எனவும் குறிப்பிட்டார்.
'மோடி @20: ட்ரீம்ஸ் மீட் டெலிவரி' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், நாட்டின் அனைத்து மூலைகளிலும் பாஜக சென்று சேர்ந்துள்ளது. ஹிந்தி பேசும் மாநிலங்களில் மட்டுமே பாஜக உள்ளது போன்ற வதந்திகளையும் இது பொய்யாக்கியுள்ளது.
எந்தவித அரசியல் குடும்ப பின்னணியும் இல்லாமல் அவர் நாட்டின் தலைவராக உருவாகியுள்ளது பெரிய செயல். இது விவசாயிகளின் கட்சி அல்ல என்றார்கள். ஆனால் கூட்டுறவு சங்கங்களில் பாஜக வெற்றி பெற்று அந்த கூற்றையும் பொய்யாக்கியது என்று குறிப்பிட்டார்.