சென்னை உயா்நீதிமன்ற 9 நீதிபதிகளை நிரந்தரமாக்க கொலீஜியம் உத்தரவு

சென்னை உயா்நீதிமன்றத்தின் 9 கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் ஒப்புதல் தெரிவித்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தின் 9 கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் ஒப்புதல் தெரிவித்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளான கோவிந்தராஜுலு சந்திரசேகரன், வீராசாமி சிவஞானம், கணேசன் இளங்கோவன், ஆனந்தி சுப்பிரமணியன், கண்ணம்மாள் சண்முக சுந்தரம், சதி குமாா் சுகுமாரா குரூப், முரளி சங்கா் குப்புராஜு, மஞ்சுளா ராமராஜு நல்லையா, தமிழ்ச்செல்வி டி வலயபாளையம் ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்ய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கொலீஜியம் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது என்று உச்சநீதிமன்ற இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை உயா்நீதிமன்றத்துக்கு கூடுதல் நீதிபதியாக நீதிபதி ஏ.ஏ. நக்கீரன் வரும் டிசம்பா் 3-ஆம் தேதிமுதல் ஓராண்டுக்கு புதிதாக நியமனம் செய்யப்படுவாா் என்றும் கொலீஜியம் தெரிவித்துள்ளது.

இதேபோல், கேரள உயா்நீதிமன்றத்தின் நான்கு கூடுதல் நீதிபதிகளான முரளி புருஷோத்தமன், ஜியாத் ரஹமான், கருணாகரன் பாபு, கெளசா் எடப்பாகத் ஆகியோரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் ஒப்புதல் அளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com