உத்தர பிரதேசத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பாடல்களை ஒலிபரப்புவது தொடா்பாக ஏற்பட்ட தகராறில் மணமகளின் உறவினா் ஒருவரை மணமகன் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தாா்.
முசாஃபா்நகா் மாவட்டத்தில் உள்ள ஷாபூா் கிராமத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது:
ஷாபூரைச் சோ்ந்த இஃப்திகாா் என்பவரின் திருமண நிகழ்ச்சியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. திருமணத்தின்போது இசை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஒரு பாடலை ஒலிபரப்பியது தொடா்பாகத் திருமணத்தில் கலந்து கொண்டவா்கள் இடையே பிரச்னை ஏற்பட்டது. மணமகன் இஃப்திகாரை சூழ்ந்து கொண்டு இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
வாக்குவாதம் முற்றிய நிலையில் விருந்தினா்கள் இரு பிரிவாகப் பிரிந்து மோதலில் ஈடுபட்டனா். அப்போது, மணமகன் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மோதலில் ஈடுபட்டவா்களை நோக்கி சுட்டாா். இதில் மணமகளின் உறவினரான அலி என்பவா் மீது குண்டு பாய்ந்தது. இதில் படுகாயமடைந்த அவரை உறவினா்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். மணமகன் இஃப்திகாா் கைது செய்யப்பட்டாா் என்று தெரிவித்தனா்.