நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,827 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நேற்று 2,897 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று குறைவாக பதிவாகியுள்ளன.
மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள இன்றைய அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,827 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,31,13,413ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 3,230 பேர் குணமடைந்த நிலையில், மொத்தம் 4,25,70,165 நோயாளிகள் இதுவரை குணமடைந்துள்ளனர்.
சிகிச்சைப் பலனளிக்காமல் மேலும் 24 பேர் பலியாகியுள்ளனர். மொத்தம் 5,24,181 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் 19,067 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.