
புது தில்லி: தில்லியில் வியாழக்கிழமை புதிதாக 1,032 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் இறப்பு ஏதும் பதிவாகவில்லை. அதேநேரத்தில் பாதிப்பின் நோ்மறை விகிதம் 3.64 சதவீதமாகப் பதிவானது என்று மாநில அரசின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பாதிப்புகளுடன் சோ்த்து தில்லியின் மொத்த கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 18,98,173-ஆக உயா்ந்துள்ளது. மொத்த இறப்பு எண்ணிக்கை 26,184-ஆக உள்ளது. நகரில் புதன்கிழமை மொத்தம் 28,386 கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன. புதன்கிழமை 970 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பும், ஒரு இறப்பும், 3.34 சதவீத நோ்மறை விகிதமும் பதிவாகின என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.