புது தில்லி: ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாகக் எலான் மஸ்க் இன்று கூறியுள்ளார்.
எலான் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தம் நிறுத்தப்பட்ட செய்தியால் ட்விட்டரின் பங்கு விலை 19 சதவீதமாக சரிந்ததுள்ளது.
போலி கணக்குகள் குறித்த விவரங்கள் நிலுவையில் இருப்பதால் ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக எலான் மஸ்க் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கவுள்ளதாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.