கராச்சியில் குண்டு வெடிப்பு: ஒருவர் பலி, பலர் காயம்

கராச்சியில் குண்டு வெடிப்பு: ஒருவர் பலி, பலர் காயம்

கராச்சியின் சதார் பகுதியில் வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். பலர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர். 

கராச்சியின் சதார் பகுதியில் வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். பலர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர். 

தாவுத் போட்டா சாலையில் நடைபெற்ற இந்த வெடி விபத்தில் ஆறு முதல் ஒன்பது வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பாகிஸ்தான் கடலோர காவல்படையினர் வெடிகுண்டு வைத்திருக்க வாய்ப்புள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் வாகனத்தில் உள்ளவர்கள் காயமடையவில்லை. 

தகவல் அமைச்சர் ஷர்ஜீல் அமைச்சர், மூன்று பேர் காயமடைந்ததாக உறுதிப்படுத்தினார், ஆனால் மற்ற அறிக்கைகள் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 11 என்று கூறுகின்றன.

ஒருவர் கொல்லப்பட்டதாக ஜின்னா முதுநிலை மருத்துவ மையத்தின் (ஜேபிஎம்சி) நிர்வாக இயக்குநர் ஷாஹித் ரசூல் தெரிவித்தார். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். 

போலீசார் அந்த பகுதியைச் சுற்றி வளைத்து வெடிகுண்டு செயலிழக்கும் படையை வரவழைத்தனர்.

முதல் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து மற்றொரு வெடிவிபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், மக்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறுமாறு காவல்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com