இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பலூசிஸ்தான் நகரின் டேரா புகிட்ஸ் பகுதியில் வயிற்றுப்போக்கு பாதிப்புக்கு குழந்தை உட்பட 4 பேர் பலி.
பாகிஸ்தானில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் குட்டையில் உள்ள மாசடைந்த நீரை குடித்து வயிற்றுப்போக்கால் மக்கள் 1500க்கும் மேற்பட்டோர் பாதிப்பு.
டேரா புகிட்ஸ்யின் மாவட்ட சுகாதாரத் துறை அமைச்சர் கூறியதாவது:
இந்தாண்டின் முதல் காலரா ஏப்ரல் 17 ஆம் நாள் தொடங்கியது. இதுவரை 1500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குழந்தை உட்பட 4 பேர் இறந்துள்ளனர். மேலும் புதன்கிழமை புதியதாக 123 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தண்ணீர் பற்றாக்க்குறையை போக்க பலூசிஸ்தான் மாவட்ட ஆட்சியர் ஆணையம் ஒன்றினை அமைத்து தீர்ப்பதாக கூறியுள்ளார்.