ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் கலீஃபா பின் சையத் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், ஷேக் கலீஃபா பின் சையத் மறைவு குறித்து அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன். அவர் ஒரு சிறந்த அரசியல்வாதி மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவராக இருந்தார்.
அவரது தலைமையின் கீழ் இந்தியா-யுஏஇ உறவுகள் முன்னேற்றமடைந்தது. ஐக்கிய அரபு அமீரக மக்களுக்கு இந்திய மக்களின் இதயப்பூர்வமான இரங்கல்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்." இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.