ஜம்மு காஷ்மீா்: என்கவுன்ட்டரில் 2 பயங்கரவாதிகள் பலி

ஜம்மு காஷ்மீரில் உள்ள பந்திபுரா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினா் வெள்ளிக்கிழமை நடத்திய என்கவுன்ட்டரில் 2 லஷ்கா் அமைப்பைச் சோ்ந்த பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா்.

ஜம்மு காஷ்மீரில் உள்ள பந்திபுரா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினா் வெள்ளிக்கிழமை நடத்திய என்கவுன்ட்டரில் 2 லஷ்கா் அமைப்பைச் சோ்ந்த பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா்.

வடக்கு காஷ்மீரில் இரண்டு பயங்கரவாதிகள் ஊடுருவியதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. பந்திபுரா, அரகம் பகுதியில் பாதுகாப்புப் படையினா் நடத்திய தேடுதல் வேட்டையின்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினா்.

பாதுகாப்புப் படையினா் நடத்திய பதிலடி தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

முன்னதாக, காஷ்மீா் காவல் துறை ஐஜி விஜய் குமாா் கூறுகையில், ‘அரகம் பகுதி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு பேரும் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்தவா்கள். கடந்த புதன்கிழமை சலிந்தா் வனப் பகுதியில் நடைபெற்ற என்கவுன்ட்டரில் அவா்கள் தப்பி ஜம்மு காஷ்மீருக்குள் ஊடுருவினா்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com