கோரக்பூர் : உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யனாத், கோரக்பூரில் புதிய பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
287 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். திக் விஜ்யனாத் ஸ்மிரிதி பூங்கா மேம்பாட்டிற்கு 144 கோடி ரூபாய், கோரக்க்பூர் தொழில் வளர்ச்சி மேம்பாட்டிற்கு 143 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவாஸ் விகாஸ் பரிஷத் திட்டதிற்கு 111.33 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்ளுக்கு அடிக்கல் நாட்டினார்.
கட்டிட வளர்ச்சி மேம்பாட்டிற்கு 143 கோடி ரூபாய் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
கஸ்தூரிபா காந்தி பெண்கள் விடுதி மேம்பாட்டிற்கு 2.16 கோடியும் அரசு ஐடிஐ வளாகத்திற்க்கு 4.52 கோடியும் ஒதுக்கப்பட்டது.