ஜம்மு-காஷ்மீரில் புதிதாக 5 பேர் கரோனாவால் இன்று (செவ்வாய்க்கிழமை) பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதிதாக 5 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், ஜம்மு-காஷ்மீரில் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,54,153 ஆக அதிகரித்துள்ளது.
உயிழப்புகளில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து 4,752 ஆக உள்ளது.
புதிதாக தொற்று பதிவாகியுள்ள 5 பேரில் 3 பேர் ஜம்மு மாவட்டத்தையும், 2 பேர் ஸ்ரீநகர் மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள். தற்போது கரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 50 ஆக உள்ளது.