ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் சிறுமி கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அனந்தநாக் மாவட்டத்தில் சிறுமி ஒருவரை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர்.
"வழக்கமான ரயில் பாதை சோதனையின் போது ரயில்வே காவலர்கள் ஒரு சிறுமியுடன் இரண்டு இளைஞர்கள் இருப்பதை பார்த்துள்ளனர். செவ்வாய்க் கிழமை அந்த சிறுமி தனது வீட்டிற்கு போகும் வழியில் இருவரும் வலுக்கட்டாயமாக கடத்தியிருக்கின்றனர்.
ஹாசான்போரா பகுதியில் வசித்து வரும் தனீஷ் அஹமது ரதேர், முக்தார் அஹமது ரதேர் ஆகியோர் தான் இந்த குற்றச் செயலை செய்துள்ளனர். வழக்குப் பதிவு செய்யப்பட்டு மேலும் விசாரணைக்காக அந்த இரண்டு பேரையும் காவலில் எடுத்துள்ளனர்" என காவல்துறையினர் தெரிவித்தனர்.
மருத்துவப் பரிசோதனைக்கு பிறகு அந்த சிறுமி குடும்பதாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.