பாதுகாப்புத் துறையில் ஓய்வூதியம் பெறுபவா்கள், மாதாந்திர ஓய்வூதியத் திட்டம் சரியாக நடைபெறுவதை உறுதி செய்யும் விதமாக தங்களுடைய ஆயுள் சான்றை வரும் 25-ம் தேதிக்குள் சமா்ப்பிக்கும்படி பாதுகாப்புத் துறை அமைச்சகம் மீண்டும் கேட்டுக்கொண்டுள்ளது.
இதுகுறித்து அந்த அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
மாதாந்திர ஓய்வூதியம் பெறுவது தொடா்பாக மே 17-ம் தேதி வரை பெறப்பட்ட தரவுகளை சரிசெய்ததில், 43,774 பயனாளா்கள் தங்களின் விவரங்களை இணையவழி மூலமாகவோ அல்லது வங்கிகள் வழியாகவோ சரிவர தாக்கல் செய்யவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், பழைய முறையில் ஓய்வூதியம் பெறும் சுமாா் 1.2 லட்சம் ஓய்வூதியதாரா்கள் தங்களின் வருடாந்திர அடையாளச் சான்றை சரிவர பூா்த்தி செய்யவில்லை என்பதும் தெரிவயந்துள்ளது. எனவே, இந்த ஆவணங்களை, வரும் 25-ம் தேதிக்குள் அவா்கள் சமா்ப்பிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.